Showing posts with label பிரதமர். Show all posts
Showing posts with label பிரதமர். Show all posts

Wednesday, 5 November 2014

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை  பிடித்தார்

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை பிடித்தார்

 அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக அளவில் புகழ்பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் சில விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த வருடம் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு முறையின்  கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 5-வது இடமும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் நமது இந்திய பிரதமர் மோடி 15 வது இடத்தில் உள்ளார். இதே போல  இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானி 36-வது இடத்திலும் , ஆர்சிலர் மிட்டல் நிறுவத்தின் தலைமை நிர்வாகியான லட்சுமி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர் சத்யநாதெல்லா 64-வது இடத்தையும் பெற்றுள்ளனர். என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.
பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம்  கொலை மிரட்டல்

பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல்

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அறுபதுக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர்.    

  இத்தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத குழுவிலிருந்து பிரிந்த தெஹ்ரிக் ஏ தாலிபான் பாகிஸ்தான்  ஜமாத் உல் அஹ்ரர் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பெற்றள்ளது.  வாகா தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்த தீவிரவாத குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக கருதப்படும் இசானுல்லா இசான் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான். 

  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர் மோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீர் மற்றும் குஜராத் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம் என்று கூறியுள்ளார் . இந்த மிரட்டலையடுத்து உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு இருந்த  காரணத்தால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த முடியாமல் போனதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   மேலும் உளவு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Sunday, 2 November 2014

குக்கிராமத்தை  தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

குக்கிராமத்தை தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

சென்னை வருகிறார் சச்சின் டெண்டுல்கர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தை, முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தத்து எடுத்து, வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், சில நாட்களுக்கு முன்பு  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமரின், 'துாய்மை இந்தியா' திட்ட வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில், குக்கிராமம் ஒன்றை தத்து எடுத்து, அக்கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பிய சச்சின், தனது என்னத்தை மற்றும் ஆசையை  பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

   ஆந்திராவில், நெல்லுார் மாவட்டம், கூடூர் அருகேயுள்ள புட்டம்ராஜிகண்டிகை என்ற குக்கிராமத்தை தத்து எடுக்க தேர்வு செய்தார்.. ஆயிரம் மக்கள் தொகை கொண்ட  இக்கிராமத்தை, சச்சின், தன் ராஜ்யசபா உறுப்பினர் நிதியில் இருந்து கிடைக்கும் தொகையில், பல அடிப்படை வசதிகளை, இங்கு வசிப்பவர்களுக்கு செய்து தர மேற்கொண்டார்.

இம்மாதம், 15ம் தேதி, மும்பையில் இருந்து, சென்னைக்கு வரும் சச்சின்டெண்டுல்கர் , 16ம் தேதி காலை கூடூர் பகுதிக்கு சென்று, புட்டம்ராஜிகண்டிகை கிராமத்தை பார்வையிட்டு, அங்கு வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து உள்ளார் , சர்வதேச தரத்தில் இந்த கிராமத்தை வளர்ச்சி அடையச் செய்ய விரும்பி, சச்சின் உத்தரவு படி, சில தினங்களாக, இக்கிராமத்தில் சாலை, குடிநீர், மின்மாற்றி, தெருவிளக்கு, பூமிக்குள் கழிவுநீர் கால்வாய், சுகாதாரம், மழைநீர் தேக்கத்திற்கான வசதி பணிகள், அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கான  மேற்பார்வை நெல்லுார் மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருகிறார். 
பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை


கடந்த பிப்ரவரி மாதம் முதல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சிதான்  நடந்து வருகிறது.இந்நிலையில்  சட்டசபையை கலைக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு  விசாரணைக்கு வந்த போது இங்கு தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என துணைநிலை ஆளுனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது தானே என்றும், முயற்சிக்கு சம்மதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பா.ஜ.,வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. 

 டில்லியில் ஆட்சி அமைப்பதா,தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது பா.ஜ.க .

  இந்நிலையில் பாஜக தலைவர்கள் கலந்து முடிவு எடுப்பார்கள். ஆம்ஆத்மி  இதில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் இதற்கென முயற்சி செய்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கிட குதிரை பேரம் நடக்கிறது என்று விமர்சிக்க படுகிறது. இதற்கான கேள்விக்கு இன்று விடை தெரிந்து விடும். 
டில்லியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ., அந்த முயற்சியில் தோல்வி அடைந்தால், டில்லி சட்டசபையைக் கலைப்பதோடு, டில்லியை மீண்டும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நடக்க போவது என்னவென்று இன்று தெரியும்.. 
வானொலியில் பிரதமர் உறை; கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

வானொலியில் பிரதமர் உறை; கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

கருப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அகில இந்திய வானொலியில் மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினர் . அவர் கூறுவதாவது,  தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற்ற இளைஞர்கள் விரும்புகின்றனர் . மற்றும் எல்லோரும் மோசமானவர்கள் என்ற என்னத்தை மாற்றவேண்டும் என வலியுறுத்தினர் . இவ்வாறு மக்களுக்கு நேரடியாக செல்லவேண்டும் என்பதற்காக அகில இந்திய வானொலியில் அவர் உரையாற்றினர் .