புதிய முதல்வர் ஆட்சிக்கு வந்த பின்பு நிர்வாகம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பெருமளவில் காணப்பட்டது . அதன் புதிய விளைவாக ஆவின் பால் விலையை உயர்த்தி முதலைமைச்சர் பன்னிர்செல்வம் உத்தரவிட்டுள்ளார் .
லிட்டர் பால் விலை 24 ல் இருந்து 34 ஆக உயர்கிறது . பால் விலை உயர்வதால் டீ ,காபி விலை அதிகமாகும் . குடும்ப பெண்களும் , ஏழை மக்களும் நேரடியாக பதிக்க படுகின்றனர் . இன்னும் பெரும்பாலானவர்கள், கிராமங்களில் இருந்து பக்கத்தில் உள்ள நகரத்திற்கு சென்றால் டீ யும் காப்பியும் நம்பியே செல்கின்றனர் .
இது குறித்து அரசு விளக்குவது : பால் விலை உயர்வால் 22.2 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனைடைவர்கள் எனவும் தனியார் பால் விலையை விட இந்த விலை குறைவுதான் என ஒப்பிட்டுள்ளார் .விற்பனை விலையை பொறுத்தவரை தனியார் பால் விலை மற்றும் இதர மாநில கூட்டுறவு பால் விலையோடு ஒப்பிடும்போது ஆவின் பால் விலை மிகவும் குறைவாகும் .
இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களின் பொருளாதார் நிலை மற்றும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பால் பண பரிமாற்றம் எந்த வகையிலும் பதிக்க கூடாது என்பதை நோக்கி அதே சமயம் நுகர்வோருக்கு நல்ல தரமுள்ள பால் விற்பனை செய்வதையும் உறுதி படுத்தும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்த படாமல் இருந்த ஆவின் பால் விற்பனை விலை உயர்த்த பட வேண்டியம் அவசியம் ஏற்பட்டுள்ளது . 1 லிட்டர் பதபடுதப்பட்ட பால் ரூ.24 லில் இருந்து ரூ.34 ஆக உயர்கிறது .லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த படுகிறது . இந்த விலை உயர்வு வரும் நவ 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது .



0 comments: