Sunday, 26 October 2014

கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?

SHARE
கருப்பு பணம் பற்றிய தகவல்களை இன்று மதியரசு வெளியிடுகின்றதா ?
       வெளிநாட்டில் கருப்பு பணம் பதிக்கியுள்ளவ்ர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று  உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைபதகாக தகவல் வெளியாகிறது .
  அந்த மூன்று பேரும் அரசியல் பிரமுகர் இல்லை . கருப்பு பணம் பற்றிய  தகவல் வெளியிடும்போது அவர்கள் பெயர்கள் வெளியிடுவதாக கூறபடுகிறது .

        கருப்பு பணம் விவரம் பற்றிய தகவல் வெளியிட முடியாது என்ற மத்திய நிதி அமைச்சர் , இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு  ஒப்பந்தத்தின்படியே கருப்பு பணம் வைத்திருப்போரின் பெயரை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்தார் . மேலும், வழக்கின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏற்றவாறு சிறிது சிறிதாக அப்பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை உச்சநீதிமன்றத்தில் அரசு வழங்கும் என்று தெரிவித்துள்ளார் . அந்த அடிப்படையில், இன்று உச்ச நீதிமன்றத்தில்     தகவல் வெளியிடுவதாக   கூறப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி,  கருப்புப் பணம்   விவரங்களை வெளியிட்டால், காங்கிரஸ் கட்சிக்கு சங்கட்டம்  ஏற்படும் என்று கூறியிருந்தார்.
    ஆனால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், கருப்புப் பணம் பற்றிய தகவல்களை  வெளியிட வேண்டும் என்றும், காங்கிரஸ் தெரிவித்துள்ளது .   
SHARE

Author: verified_user

0 comments: