Tuesday 4 November 2014

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

SHARE
 இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் மீண்டும்  சந்திக்க இருப்பதாக  தெரியவருகிறது. அடுத்த வாரம் கிழக்கு ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்கிறார் . சீனா, மியான்மர் , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இதனிடையே  வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபக்பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது, இதனையடுத்து மியான்மர் நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் அமெரிக்க ஆசியன் உச்சி மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் ஒபாமா . 


  அடுத்தாண்டு மியான்மரில் நடைபெற உள்ள பொது தேர்தலில் முக்கிய எதிர்கட்சி தலைவரான ஆங்சாங்சூயி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையடுத்து ஆங்சாங்சூயி ஒபாமா சந்திப்பு நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெற உள்ளார்.இதனிடையே இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது.   முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற சென்றார் மேலும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. .
SHARE

Author: verified_user

0 comments: