Wednesday 26 November 2014

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல்,டீசல்  விலை லிட்டருக்கு ரூ.2  குறைக்கப்படுவதாக  தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
 சர்வதேச சந்தையில் நான்கு  ஆண்டுகளின் இல்லாத அளவில்  கச்சா எண்ணெயின்  விலை அதிகமாக குறைந்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் பெட்ரோல் விலை 30-ம் தேதி முதல் லிட்டருக்கு 2 ரூபாய் குறையும் என்று டெல்லி தகவள் வட்டாரங்கள்  கூறபடுகின்ற்றனர்.. கடந்த 31-ம் தேதி பெட்ரோல் விலை 2.41 காசுகளும், டீசல் விலை 2.25 காசுகளும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத. இதன் விளைவாக பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் வருத்தமடைவதாக தெரியவருகிறது.  

Wednesday 5 November 2014

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை  பிடித்தார்

பிரதமர் மோடி 15 ஆவது இடத்தை பிடித்தார்

 அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு வருடமும் உலக அளவில் புகழ்பெற்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் செல்வாக்கு மற்றும் புகழ் இன்னும் சில விதிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளார் பிரதமர் மோடி. இந்த வருடம் இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 72 தலைவர்கள் பல்வேறு முறையின்  கீழ் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் முதலிடத்திலும், அமெரிக்க அதிபர் ஓபாமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

 சீன அதிபர் ஷின்ஜின்பிங் 3-வது இடம், போப் பிரான்சிஸ் 4-வது இடம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 5-வது இடமும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் நமது இந்திய பிரதமர் மோடி 15 வது இடத்தில் உள்ளார். இதே போல  இந்தியாவை சேர்ந்த அனில் அம்பானி 36-வது இடத்திலும் , ஆர்சிலர் மிட்டல் நிறுவத்தின் தலைமை நிர்வாகியான லட்சுமி மிட்டல் 57-வது இடத்திலும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர் சத்யநாதெல்லா 64-வது இடத்தையும் பெற்றுள்ளனர். என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.
12  பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

12 பேருக்கு நிபந்தனையில் ஜாமின்

சென்னையில் கத்தி படம்  வெளியாக  கூடாது என திரையரங்குகளை தாக்கியதில் கைது செய்த 12 பேருக்கு   சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையில்   ஜாமின் வழங்கியது.
தங்கத்தின் விலை குறைவு, மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைவு, மக்கள் மகிழ்ச்சி

தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280  குறைந்துள்ளது . ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 2422/-    சவரன் ரூ 19376/-  விற்க்கபடுகிறது  . சர்வதேச சந்தையில் தங்கத்தின்  விலை குறைந்துள்ளதே இதற்கு காரணம் என கருதபடுகிறது . கடந்த அக்டோபர்31-ம் தேதி தங்கத்தின் விலை 20,000 ரூபாய்க்கு கீழே செல்ல தொடங்கியது. அதனை தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி 19,760-ஆகவும், நவம்பர் 2-ம் தேதி இந்த விலையில் 88 ரூபாயும், நவம்பர் 4-ம் தேதி 16 ரூபாயும் குறைந்து இருந்தது.

   இன்று தங்கத்தின் விலை மேலும் அதிரடியாக குறைந்துள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.36.80  பைசவாகும், ஒரு கிலோ ரூ 34360/- ரூபாயாக விற்க்கபடுகிறது.  இதானால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம்  கொலை மிரட்டல்

பிரதமருக்கு பக்-தீவிரவாத இயக்கம் கொலை மிரட்டல்

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அறுபதுக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தனர்.    

  இத்தாக்குதலுக்கு தாலிபான் தீவிரவாத குழுவிலிருந்து பிரிந்த தெஹ்ரிக் ஏ தாலிபான் பாகிஸ்தான்  ஜமாத் உல் அஹ்ரர் என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பெற்றள்ளது.  வாகா தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்த தீவிரவாத குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக கருதப்படும் இசானுல்லா இசான் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான். 

  நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர் மோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீர் மற்றும் குஜராத் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம் என்று கூறியுள்ளார் . இந்த மிரட்டலையடுத்து உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு இருந்த  காரணத்தால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த முடியாமல் போனதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   மேலும் உளவு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Tuesday 4 November 2014

பொருளாதாரத்தை சரி செய்ய கால அவகாசம் ஆகலாம் !

பொருளாதாரத்தை சரி செய்ய கால அவகாசம் ஆகலாம் !

இந்தியாவின் பொருளாதாரத்தை சரி செய்ய இன்னும் கால அவகாசம் அகாலம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
   இந்தியா முதளிட்டார்களின் பார்வைக்கு தென்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார் . 
அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அஷோபா என புதிய புயல். அதிர்ச்சி தகவல்

அந்தமான் அருகே அஷோபா என  புதிய புயல் உருவாகி உள்ளது.

  அஷோபா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிரமடைந்து, ஆந்திரா, தமிழகத்தை அடுத்த மூன்று நாட்களில் தாக்கலாம் என வானிலை ஆய்வு மையம்அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த அஷோபா புயல், வரும் 8 அல்லது 9ம் தேதிகளில் தீவிர புயலாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. 
    கடந்த மாதம் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு, ஹுட்ஹுட் என பெயரிடப்பட்டது. இந்த புயல், விசாகப்பட்டனம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால், ஆந்திர கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பு  ஏற்பட்டது... இந்த முறை இலங்கை பெயர் சூட்டி உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள. இது குறித்து விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'தற்போது, விசாகப்பட்டனத்தில் இருந்து 1400 கி.மீ., தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அது வலுவடைந்து புயலாக மாறும். அடுத்த மூன்று தினங்களில் அது கரையை கடக்கும். புயல் தொலைவில் நிலை கொண்டிருப்பதால், அது எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை தற்போது கூற முடியாது. புயல் நெருங்கியவுடன் அது குறித்த தகவல் வௌியிடப்படும்.
 வங்க கடலில் அந்தமான் அருகேயும், இலங்கை அருகேயும் புயல் சின்னங்கள் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் மழை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வௌியிட்டுள்ள தகவலில், 'இலங்கை அருகே காற்றின் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யா வாய்ப்பு உள்ளதாக தெரிவிகின்றனர்.
மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

மோடி-ஒபாமா சந்திக்க வாய்ப்பு

 இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் மீண்டும்  சந்திக்க இருப்பதாக  தெரியவருகிறது. அடுத்த வாரம் கிழக்கு ஆசிய நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்கிறார் . சீனா, மியான்மர் , ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். இதனிடையே  வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபக்பொருளாதார மாநாடு நடைபெற உள்ளது, இதனையடுத்து மியான்மர் நாட்டில் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறும் அமெரிக்க ஆசியன் உச்சி மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார் ஒபாமா . 


  அடுத்தாண்டு மியான்மரில் நடைபெற உள்ள பொது தேர்தலில் முக்கிய எதிர்கட்சி தலைவரான ஆங்சாங்சூயி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையடுத்து ஆங்சாங்சூயி ஒபாமா சந்திப்பு நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கு பெற உள்ளார்.இதனிடையே இருவரும் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது.   முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற சென்றார் மேலும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. .

Sunday 2 November 2014

குக்கிராமத்தை  தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

குக்கிராமத்தை தத்து எடுத்த சச்சின். சென்னை வருகிறார்

சென்னை வருகிறார் சச்சின் டெண்டுல்கர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமத்தை, முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தத்து எடுத்து, வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், சில நாட்களுக்கு முன்பு  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பிரதமரின், 'துாய்மை இந்தியா' திட்ட வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில், குக்கிராமம் ஒன்றை தத்து எடுத்து, அக்கிராமத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பிய சச்சின், தனது என்னத்தை மற்றும் ஆசையை  பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

   ஆந்திராவில், நெல்லுார் மாவட்டம், கூடூர் அருகேயுள்ள புட்டம்ராஜிகண்டிகை என்ற குக்கிராமத்தை தத்து எடுக்க தேர்வு செய்தார்.. ஆயிரம் மக்கள் தொகை கொண்ட  இக்கிராமத்தை, சச்சின், தன் ராஜ்யசபா உறுப்பினர் நிதியில் இருந்து கிடைக்கும் தொகையில், பல அடிப்படை வசதிகளை, இங்கு வசிப்பவர்களுக்கு செய்து தர மேற்கொண்டார்.

இம்மாதம், 15ம் தேதி, மும்பையில் இருந்து, சென்னைக்கு வரும் சச்சின்டெண்டுல்கர் , 16ம் தேதி காலை கூடூர் பகுதிக்கு சென்று, புட்டம்ராஜிகண்டிகை கிராமத்தை பார்வையிட்டு, அங்கு வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து உள்ளார் , சர்வதேச தரத்தில் இந்த கிராமத்தை வளர்ச்சி அடையச் செய்ய விரும்பி, சச்சின் உத்தரவு படி, சில தினங்களாக, இக்கிராமத்தில் சாலை, குடிநீர், மின்மாற்றி, தெருவிளக்கு, பூமிக்குள் கழிவுநீர் கால்வாய், சுகாதாரம், மழைநீர் தேக்கத்திற்கான வசதி பணிகள், அக்கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இதற்கான  மேற்பார்வை நெல்லுார் மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருகிறார். 
பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை

பாஜக ஆட்சி அமைக்குமா ? இன்று ஆலோசனை


கடந்த பிப்ரவரி மாதம் முதல் டில்லியில் ஜனாதிபதி ஆட்சிதான்  நடந்து வருகிறது.இந்நிலையில்  சட்டசபையை கலைக்க வேண்டும் என ஆம்ஆத்மி கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு  விசாரணைக்கு வந்த போது இங்கு தற்போது தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்துள்ளோம் என துணைநிலை ஆளுனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டியது தானே என்றும், முயற்சிக்கு சம்மதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் பா.ஜ.,வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை. 

 டில்லியில் ஆட்சி அமைப்பதா,தேர்தலை சந்திப்பதா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது பா.ஜ.க .

  இந்நிலையில் பாஜக தலைவர்கள் கலந்து முடிவு எடுப்பார்கள். ஆம்ஆத்மி  இதில் ஆட்சி அமைத்தால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் இதற்கென முயற்சி செய்தால் எம்.எல்.ஏ.,க்கள் விலைக்கு வாங்கிட குதிரை பேரம் நடக்கிறது என்று விமர்சிக்க படுகிறது. இதற்கான கேள்விக்கு இன்று விடை தெரிந்து விடும். 
டில்லியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் பா.ஜ., அந்த முயற்சியில் தோல்வி அடைந்தால், டில்லி சட்டசபையைக் கலைப்பதோடு, டில்லியை மீண்டும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற திட்டமிட்டு வருகிறது என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  நடக்க போவது என்னவென்று இன்று தெரியும்.. 
வானொலியில் பிரதமர் உறை; கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

வானொலியில் பிரதமர் உறை; கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை

கருப்பு பணத்தை மீட்க கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அகில இந்திய வானொலியில் மக்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றினர் . அவர் கூறுவதாவது,  தூய்மை இந்தியா திட்டம் நிறைவேற்ற இளைஞர்கள் விரும்புகின்றனர் . மற்றும் எல்லோரும் மோசமானவர்கள் என்ற என்னத்தை மாற்றவேண்டும் என வலியுறுத்தினர் . இவ்வாறு மக்களுக்கு நேரடியாக செல்லவேண்டும் என்பதற்காக அகில இந்திய வானொலியில் அவர் உரையாற்றினர் . 

Saturday 1 November 2014

2013-2014 அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்டது 68 பில்லியன் டாலர்

2013-2014 அமெரிக்க உளவு அமைப்புகள் செலவிட்டது 68 பில்லியன் டாலர்


அமெரிக்க உளவு அமைப்புகள் 2013 -2014 ஆண்டில்  செலவிட்ட தொகை 68 பில்லியன் டாலர் (ரூ. 4.08 லட்சம் கோடி) என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
  அமெரிக்காவில் 17 உளவு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில உள்நாட்டில் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்காக அந்நாட்டு அரசு செலவிட்ட மொத்ததொகைகுறித்தவிவரங்கள்வியாழக்கிழமைவெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் முதல் 2014 செப்டம்பர் வரையிலான கால அளவில்உளவு அமைப்புகளுக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகைக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அக்டோபர் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவை நிதி ஆண்டாக அமெரிக்கா கடைப்பிடித்து வருகிறது.
   
இதில் சிஐஏ அமைப்பு மட்டுமே 50.5 பில்லியன் டாலர் ( ரூ. 3.03 லட்சம் கோடி) செலவிட்டுள்ளது. ராணுவ ரீதியான உளவுத் தகவல் சேகரிப்புத் திட்டங்களுக்கு 17.4 பில்லியன் டாலர் ( ரூ. 1,04,400 கோடி) செலவிடப்பட்டது. அதற்கு முந்தைய 2012-2013 நிதி ஆண்டின்போதும்உளவு அமைப்புகள் செலவிட்ட தொகை சுமார் 68 பில்லியன் டாலராகும் (சுமார் ரூ. 4,08,000 கோடி). ஆயினும்அந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் முதலில் ஒதுக்கீடு செய்த தொகை அதைவிட மிகக் கூடுதலாக இருந்தது.அரசின் செலவுக் குறைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, பல லட்சம் கோடி மதிப்பில் உளவு அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு பின்னர் குறைக்கப்பட்டது.அமைப்புவாரியாகவும் பயன்பாட்டுவாரியாகவும் விரிவான செலவு விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது

பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் இன்று தொடங்கியது. இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெறும். தற்போது உள்ளதை விட 4 மடங்கு அதிகம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 பாரதிய ஜனதா கட்சியில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொள்பவர்கள் 6 ஆண்டுகள் அக்கட்சியில் இருப்பார்கள் என தகவல் வெளியானது. விண்ணப்பப் படிவங்கள் மட்டுமல்லாது, இணையதளத்திலும் பதிவு செய்து உறுப்பினராகலாம் என்று பாஜக  தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, இணையதளம் மூலம் பதிவு செய்கிறார். இரண்டாவதாக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பதிவு செய்துகொள்கிறார். உறுப்பினர்களின் சேர்க்கைக்காக பிரத்யேக தொலைபேசி எண் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொள்பவர்களின் விவரங்கள் அந்தந்த இடத்தில் உள்ள பாரதிய ஜனதா தலைவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் இதன் மூலம் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் கட்சியில் சேராமல் தடுக்கப்படும் என்றும் தேசிய பொதுச்செயலாளர் நட்டா கூறியுள்ளார்.
நோக்கியா ஆலை மூடப்பட்டது

நோக்கியா ஆலை மூடப்பட்டது

நோக்கியா நிறுவன ஆலை முடபட்டுவிட்டது , கலையில் வேலைக்கு வந்த பணியாளர்கள் திரும்பி சென்றுவிட்டனர், மைக்ரோசொப்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்று மூடப்பட்டது .

Friday 31 October 2014

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது

பெட்ரோல் டீசல் விலை இரவோடஇரவாக குறைக்க பட்டது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து உள்ளது.  இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சரி கட்டி லாபத்தை ஈட்டி வருகின்றது. இதனால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43ம் குறைக்கப்படுள்ளது.

   இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே நாடு முழுவதும் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59ல் இருந்து ரூ.67.01 ஆக விலை சரியபடுள்ளது . டீசல் லிட்டருக்கு ரூ.59.27ல் இருந்து 56.84 ஆக சரியபட்டுள்ளது . 
 

   பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த முறை வரை  6வது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இவை , காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பினை சாதகமான பா.ஜ.க  தலைவர்கள் கருதபடுவதாக தெரியபடுகிறது.
ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் 5 முறைக்கு மேல் பணம் எடுபவர்களுக்கு கட்டணம் .

ஏ-டி-ம் மூலம் பணம் எடுப்பவர்களுக்கு கவனம்:   உங்களது வங்கி கணக்கில்  இருந்து பணம் எடுக்க மாதம்  5 முறைக்கு மேல் ஏ.டி.எம்-யை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்  ஆகிய பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே இன்று முதல் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து மாதம் 5 முறை மட்டுமே ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுத்தல், பணம் இருப்பு விவரம் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளை இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். அதற்க்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 20 கட்டணமாக வசூலிக்க படும் .

இதே போன்று மற்ற வங்கி ஏ.டி.எம்களில்  இருந்து 3 முறை கட்டணம் இல்லாமல்  பணம் எடுக்கலாம்.கணக்கு வைத்துள்ள ஏ.டி.எம் மூலம் 5 முறைக்கு மேலும், மற்ற வங்கி ஏ.டி.எம்  மூலம் 3 முறைக்கு மேலும் நடைபெறும் ஒவ்வொரு உபரி பரிவர்த்தனைக்கும் வங்கி இருப்பிலிருந்து ரூ.20 பிடித்தம் செய்யப்படும்.  

  ஆனால் இந்த பிடித்தம் குறிபிட்டுள்ள 6 பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வந்துள்ளது. மற்ற நகரங்களில்  உள்ள ஏ.டி.எம் களில் ஏற்கனவே உள்ளபடி வாடிக்கையாளர்கள் சேவையை பெறலாம். கணக்கு வைத்திருக்கும் ஏ.டி.எம்களில் இருந்து முற்றிலும் இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. .
மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மோடி முன்னிலையில் பதவியேர்ப்பு விழா

மராட்டிய மாநிலத்தில் 27 ஆவது முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்  பதவியேற்றர். இந்த பதவியேற்ப்பு விழா மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இதில் சுமார் 40000 பேர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  மராட்டிய மாநிலத்தில்  பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும். இவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். இது மோடி முன்னிலையில் பதவியேற்ப்பு விழா நடைபெற்றது . விழாவிற்கு சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும்  எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டனர் . 
காலவரையற்ற வேலை நிறுத்தம் : மீனவர் சங்கம்

காலவரையற்ற வேலை நிறுத்தம் : மீனவர் சங்கம்

தமிழக மீனவர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வர மீனவர்கள் சங்கத்தில் முடிவெடுத்துள்ளது என தகவல் வெளியாகிறது . அதில் நவம்பர் 6 ஆம் தேதிக்குள் மீட்க்க படவில்லை என்றால், நவம்பர் 7 ஆம் தேதி முதல் அணைத்து சங்ககளுடன் ஆலோசனை நடைபெறும். இதில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக கூடத்தில் முடிவு எடுக்க படும் என கூரபடுகின்றனர். 
சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் கும்  அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது,  இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகின ஆனால் அவர் தனது சொந்த வீட்டிலே இருப்பதாக கூறினார். 
  மேலும் அவர்  சென்னை, தேனாம்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் குருப்பிருப்பது: ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. அந்த  சொத்தில் எனக்கு எந்த பங்கும்  கிடையாது என்று எனது சகோதரர் கணேசன் என்னை வெளியேறும்படி கூறுகிறார். மேலும் உயிரில்  எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டு கொள்கிறேன். 
  மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிபிட்டுள்ளார்.. மேலும் அவர் . இன்னும் இரண்டு நாட்களில் என் சகோதரர் கணேசன் இந்த பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன் என்று நடிகர்  கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்

இலங்கை தூதரகத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைவர் வேல்முருகன் தலைமையில் 400 பேர் முற்றுகையிட முயன்றனர். தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பை கண்டித்து முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கபட்டுருகின்றனர் .  

Thursday 30 October 2014

ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து பேசினார்

ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து பேசினார்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தனது ராஜினாமா முடிவு குறித்து அவர் கூறினார் . மாநில அளவில் கட்சி சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டெல்லி மேலிடத்திற்கு உண்டு என்றாலும், கட்சியின் வளர்ச்சி குறித்து மாநில தலைவர்களை ஆலோசிக்க வேண்டும். கட்சி நலனுக்காக பல சங்கடங்களை சமாளித்துள்ளேன் என்றும் பல கவலைகள், சங்கடங்கள் எனக்கு இருக்கிது என்று கூறினார், இதனால் தனது ராஜனாமா முடிவு எடுபதாக அவர் கூறியுள்ளார் .
பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு

பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு

சர்வதேச அளவில் கச்சா என்னை விலை குறைந்துள்ளதால் , பெட்ரோல்,டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது .

 கடந்த 18ஆம் தேதி டீசல் விலை 3.37 காசு குறைந்தது , இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை  2.50காசுகள் வரை குறையலாம் என எதிர்பக்கபடுகிறது . இதுகுறித்து நாளை மத்திய அரசு தீர்மானிக்கும் என நம்பபடுகிறது .
    இனி வரவிருக்கும் ஜம்முகாஷ்மீர்  ஜார்கண்ட் சட்டபேரவை தேர்தலை எதிர்பார்த்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .
இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு  தூக்கு தண்டனை

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக கடந்த 2011-ல் வழக்கு தொடங்கப்பட்டது , அந்த வழக்கில் 8 பேர் கைதாகினர், அதில் 5பேர் தமிழக மீனவர்கள் , 3 பேர் இலங்கை மீனவர்கள் . இவர்களுக்கு கொழும்பு நகர நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது .
      தூக்கு தண்டனை விதிக்க பட்டவர்கள் 5 பேர் தமிழக மீனவர்கள்.  ராமநாதபுரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் .  இந்த  தூக்கு தண்டனை வழங்கியதை கேட்டது ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
      

Wednesday 29 October 2014

கத்தி பட குழுவினர்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்

கத்தி பட குழுவினர்களுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்

சமீபத்தில் வெளியான கத்தி படம் விஜய்-யை  அல்லோல பட வைக்கிறது , கத்தி படத்தில் அவர் 2-ஜி ஊழலை அவர் வசனமாக பேசியிருப்பார் , ஆனால் அந்த வசனத்திற்காக ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றிருந்தது.
    ஆனால் இந்த 2-ஜி வழக்கு விசாரணையில் இருக்கையில் எப்படி இதை வசனமாக வைக்க முடியும் , என்று இந்த திரைப்பட குழுவினரிடம் மதுரை நிதிமன்றம் புகார் எழுப்பியுள்ளது . இந்த வழக்கு நிதிமன்றத்தில் இருக்கையில் இதற்கு திரைபடத்தில் திர்ப்பு வழங்குவது நிதித்துறையை அவமதிப்பதாக தெரியவருகிறது . அதனால் திரைப்பட குழுவினர்களுக்கு மதுரை நீதிமன்றம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
பாஜக புதிய அமைச்சரவை: கூட்டணி சேருமா சிவசேனா ?

பாஜக புதிய அமைச்சரவை: கூட்டணி சேருமா சிவசேனா ?

நாளை பாரதிய ஜனதா கட்சியின் புதிய அமைச்சரவை மகாராஷ்டிராவில் பதவி ஏற்கும். இந்நிலையில் கூட்டணியில் இடம்பெறுவது குறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று தெரியவருகிறது.  
 மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த  சட்டபேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  அமோக வெற்றி பெற்றது , இருந்தும் அதற்கான  தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என வருதபடுகிறது .

இந்நிலையில் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற சிவசேனாவுடன் கட்சியுடன்  அக்கட்சி பேச்சுவாரத்தை நடத்தியது. இருந்தும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தேவிந்திர பட்நாவிஸ் முன்னிலையில்  6 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளதாக  தெரியவருகிறது. .  

  பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  பாரதிய ஜனதா கட்சியின்  மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த 2 பேர் பதவி ஏற்பதாக தெரியவருகிறது
  
இந்த நிகழ்ச்சியில் சுமார் முப்பது ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக  மும்பையில் உள்ள ஒரு பிரபலமான  மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதிய அரசு அமைக்க குறைந்த பட்சம் 145 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதால் 123 உறுப்பினர்களை கொண்ட பாஜகயுடன், 63 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா கூட்டணியில் சேர்வது உறுதியாகியுள்ளது.  இருப்பினும் அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது கூறித்து சிவசேனா இன்று முடிவு எடுக்கும் என்று தெரியவருகிறது..  
விசாகபட்டினம் முதல் சென்னைக்கு கப்பல்

விசாகபட்டினம் முதல் சென்னைக்கு கப்பல்

விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக  கப்பல் விட ஆசிய வங்கி ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இது , சுற்றுலா, சரக்கு போக்குவரத்து இரண்டையும் மாநிலங்களுக்கு இடையில் கொண்டுசெல்லும்  வகையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் விட ஆசிய வங்கி ஆலோசனை கூறியுள்ளது . பாக்ஜலசந்தி வழியாக இந்த கப்பல் போக்குவரத்தில் படகு வீடுகள், தீம் பார்க் என்று சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக  இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.
ஆசிய வங்கி , சரக்கு போக்குவரத்தும் எளிதாக இருக்கும் எனவும்  6 வழி சாலைகள் இந்த கப்பல் போக்குவரத்துக்காக அமைக்கப்படவும் ஆலோசனை
கூறியுள்ளது . உடனடியாக இதை செயல்படுத்த ஆசிய வங்கி  ஆந்திர அரசிடம் குறிபிட்டுள்ளது .