Friday 31 October 2014

சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - நடிகர் கார்த்திக்

SHARE
நடிகர் கார்த்திக் கும்  அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது,  இந்த பிரச்சனை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகின ஆனால் அவர் தனது சொந்த வீட்டிலே இருப்பதாக கூறினார். 
  மேலும் அவர்  சென்னை, தேனாம்பேட்டை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் குருப்பிருப்பது: ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. அந்த  சொத்தில் எனக்கு எந்த பங்கும்  கிடையாது என்று எனது சகோதரர் கணேசன் என்னை வெளியேறும்படி கூறுகிறார். மேலும் உயிரில்  எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டு கொள்கிறேன். 
  மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிபிட்டுள்ளார்.. மேலும் அவர் . இன்னும் இரண்டு நாட்களில் என் சகோதரர் கணேசன் இந்த பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன் என்று நடிகர்  கார்த்திக் தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: