பாகிஸ்தானிலிருந்து
செயல்படும் தீவிரவாத இயக்கம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில்
அறுபதுக்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு
தாலிபான் தீவிரவாத குழுவிலிருந்து பிரிந்த தெஹ்ரிக் ஏ தாலிபான் பாகிஸ்தான் ஜமாத் உல் அஹ்ரர் என்ற தீவிரவாத இயக்கம்
பொறுப்பெற்றள்ளது. வாகா தாக்குதலை வன்மையாக
கண்டித்துள்ள மோடிக்கு பதிலளிக்கும் விதமாக, ட்விட்டரில் அந்த தீவிரவாத
குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக
கருதப்படும் இசானுல்லா இசான் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான்.
நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர் மோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீர் மற்றும் குஜராத் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம் என்று கூறியுள்ளார் . இந்த மிரட்டலையடுத்து உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு இருந்த காரணத்தால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த முடியாமல் போனதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் உளவு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர் மோடி என்று குறிப்பிட்டுள்ள அவர், காஷ்மீர் மற்றும் குஜராத் அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு பழிவாங்குவோம் என்று கூறியுள்ளார் . இந்த மிரட்டலையடுத்து உளவுத்துறை கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு இருந்த காரணத்தால் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த முடியாமல் போனதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் உளவு துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
0 comments: